Saturday, October 15, 2005

தயிர் சாதம்



தயிர் சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி 2 கப்
தயிர் 2 மேஜைக்கரண்டி
பால் 1 கப்
கருவேப்பிலை சிறிது
கொத்துமல்லி சிறிது
மாங்காய் 1 துண்டு
இஞ்சி 1 அங்குலம்
பச்சை மிளகாய் 2
கடுகு, உளுத்தம்பருப்பு சிறிது

செய்முறை:

1) சாதத்தை சிறிது குழைவாக வேகவைத்துக்கொள்ளவும். அதனுடன் பால் தயிர் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.

2) ஓரு வாணலியில் சிறிது நெய்விட்டு அதில் கடுகு, உ.பருப்பு, க.வேப்பிலை,பொடியாக நறுக்கிய ப.மிளகாய், இஞ்சி, மாங்காய் ஆகியவற்றைப்போட்டுத் தாளித்து சாதத்தில் போட்டுக்
கிளறவும்.

3) பொடியாக நறுக்கிய கொ.மல்லியை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.

சுவையான தயிர் சாதம் ரெடி.. இது செய்வதற்கும் மிகவும் எளிது.

கோழிக் குழம்பு


கோழிக் குழம்பு

தேவையான பொருட்கள்:-

கோழி - 500 கிராம்
தேங்காய் - 1/2 முடி
வெங்காயம் - 150 கிராம்
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
சோம்பு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:-


1. குக்கரில் சிறிது நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன்
சோம்பு போட்டு பொரியவிடவும்.

2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தையும் சேர்த்து
பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

3. அதில் நன்றாக கழுவிய கோழிக்கறியுடன் அரைத்த தேங்காய்
சேர்த்து கிளறவும்.

4. பிறகு அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள்
சேர்க்கவும்.

5. பிறகு குக்கரை மூடி 3 விசில் வரும் வரை விடவும்.

6. எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.

இந்த கோழிக்குழம்பை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Labels: