Tuesday, November 08, 2005

குழாய்ப்புட்டு

தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு - 3 கப்
வெல்லம் அல்லது சர்க்கரை - 2 கப்
(உங்கள் தேவைக்கு)
தேங்காய் துருவல் - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
புட்டு குழல்




செய்முறை:-

1. அரிசிமாவில் வெல்லம், தேங்காய் துருவல், உப்பு போட்டு கிளறி கொள்ளவும்.
பிறகு சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி கொள்ளவும்.எல்லாம் சிறிது நனைந்து இருக்க வேண்டும்.

2. பிறகு புட்டுக் குடத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

3. புட்டுக் குழலில் நாம் பிசறி வைத்துள்ள் மாவை இட்டு நிரப்பி அதை புட்டுக்குடத்தின் மீது வைத்து வேக விடவும்.

4 புட்டு வெந்தவுடன் எடுத்து சுவைக்கலாம்.





நாம் அரிசிமாவுக்கு பதில் கேழ்வரகு மாவை கூட பயன்படுத்தலாம். புட்டுகுழல் இல்லாதவர்கள் மாவை குழிக்கரண்டியில் மெதுவாக அமுக்கி இட்லி தட்டில் அடுக்கி வேகவைக்கவும். சுவையான சிற்றுண்டி தயார்.

3 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

எங்கட வீட்டிலயெல்லாம் முந்தி மூங்கிற் குழலில தான் புட்டு அவிக்கிறது. இப்ப அலுமினியத்தில வந்திட்டுது.
புட்டு வைக்கும் போது இடையில் தேங்காய்ப்பூவைத் தூவ வேண்டுமென்பதைச் சொல்லிவில்லையே?
இந்த தேங்காய்ப்பூதான் புட்டை சிறுபகுதிகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பகுதியையும் சில்லு என்போம்.

Wednesday, March 15, 2006 6:34:00 AM  
Blogger Sudha said...

roomba andraga irrukiradhu..ungaluku time irrundal ennudaiya blog parunga and pls to comment..

Tuesday, May 16, 2006 11:11:00 AM  
Blogger Unknown said...

Hi Nila-
You have a nice blog here...luckily i can read and write tamil too...pl answer my basic question- how do you blog in tamil? DO you use a regular keyboard?

Tuesday, September 26, 2006 5:34:00 AM  

Post a Comment

<< Home